18,000 இந்தியர்களை நாடு கடத்தும் அமெரிக்கா.. டிரம்புடன் கை குலுக்கிய மத்திய அரசு – புளூம்பெர்க்

அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக கடந்த திங்கள்கிழமை பதவியேற்றார். அவரது கடந்த 2016-20 ஆட்சிக் காலத்தை போலவே தற்போதும் அதிரடி முடிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை கொண்ட டிரம்ப் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற அச்சம் புலம்பெயர்ந்து அங்கு குடியேறியுள்ள பல நாட்டவரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களையும் கண்டறிந்து திருப்பி பெறுவதாக இந்திய அரசு டொனால்டு டிரம்பின் நிர்வாகத்துடன் புரிந்துணர்வு மேற்கொண்டுள்ளது என புளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற புளூம்பெர்க் செய்தி மற்றும் ஆய்வு நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 18,000 இந்தியர்களை டிரம்ப் நிர்வாகம் அடையாளம் கண்டுள்ளது என்றும் நாடு கடத்தப்பட உள்ள அவர்களை இந்திய அரசு சரிபார்த்து திரும்பப்பெறும் என்று கூறப்படுகிறது.திங்களன்று தனது பதவியேற்பின்போது, அமெரிக்காவின் தெற்கு எல்லையில் டிரம்ப், தேசிய அவசரநிலையை அறிவித்தார்.நாட்டிற்குள் நிகழும் அனைத்து சட்டவிரோத நுழைவுகளும் உடனடியாக நிறுத்தப்படும் என்றும், தனது நிர்வாகம் மில்லியன் கணக்கான குற்றப்பின்னணி கொண்ட வெளிநாட்டினரை அவர்கள் வந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பத் தொடங்கும் என்றும் டிரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here