தாய்லாந்தில் நடைபெற்ற I am Model Search Kids International – 2025 அழகிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த 08 வயதான ஏஞ்சலா விமலசூரிய மகுடத்தை வென்றுள்ளார்.
உலகின் 16 நாடுகளைச் சேர்ந்த 42 போட்டியாளர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.
ஏஞ்சலா விமலசூரிய கொழும்பை சொந்த இடமாக கொண்டவர். அவர் அங்குள்ள புனித லோரன்ஸ் கல்லூரியில் 04 ஆம் தரத்தில் கல்வி பயில்கிறார்.
வெற்றி பெற்ற ஏஞ்சலா தாய்லாந்தில் இருந்து ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் இல் புறப்பட்டு சென்றபோது அவரது பயிற்சியாளர் உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் வரவேற்பை வழங்கினர்.









