கோலாலம்பூர்: ஊழியர் சேமநிதி வாரியம் (EPF) பங்குகளை வாங்கும் போதும் விற்கும் போதும் கடுமையான விதிகளைப் பின்பற்றுவதாகவும் இதில் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாம் (MAHB) பங்குகளை விற்பதும் அடங்கும் என்று நிதியமைச்சர் II அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.
EPF முன்பு MAHB இல் 15.5% பங்குகளை வைத்திருந்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டில் அதன் பங்குகளில் ஒரு பகுதியை ஒரு பங்குக்கு 6.80 ரிங்கிட் முதல் 7.70 ரிங்கிட் வரை விலையில் விற்று, பின்னர் ஒரு யூனிட்டுக்கு 11 ரிங்கிட் என்ற விலையில் பங்குகளை திரும்ப வாங்கியது. EPF கண்டிப்பாக மூலதன சந்தைகள் மற்றும் சேவைகள் சட்டம் 2007 உடன் இணங்குவதாகவும், அதன் பங்கு வர்த்தக குழுவை அதன் முதலீட்டு குழுவிலிருந்து தனித்தனியாக வைத்திருக்கும் கொள்கையைப் பயன்படுத்துவதாகவும் அமீர் கூறினார்.
இது உள் தகவல்களை தவறாக அணுகுவதைத் தடுக்கிறது. குறிப்பாக MAHB தனியார்மயமாக்கல் போன்ற சந்தர்ப்பங்களில் என்று அவர் கூறினார். எந்தவொரு மோதலையும் தடுக்க EPF அதன் தகவல் தடைக் கொள்கையை கண்டிப்பாகப் பின்பற்றுகிறது. பொது பங்கு வர்த்தகத்தைக் கையாளும் துறைக்கு மூலோபாய முதலீடுகள் தொடர்பான ரகசியத் தகவல்களை அணுக முடியாது என்று அவர் மக்களவையில் தெரிவித்தார்.
EPF தனது MAHB பங்குகள் தொடர்பாக அடைந்த லாபம் அல்லது இழப்புகள் குறித்து சோங் ஜெமின் (PH-கம்பார்) கேட்ட கேள்விக்கு அமீர் பதிலளித்தார். EPF பணத்தை இழந்ததாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார். அதன் பங்கு வர்த்தக உத்தி 2023 இல் MAHB பங்குகளை விற்றதன் மூலம் 102 மில்லியன் ரிங்கிட் லாபத்தை ஈட்டியதாகக் கூறினார்.
2023 இல் EPF இன் மொத்த முதலீட்டு வருமானம் 63.48 பில்லியன் ரிங்கிட் என்றும், இது வழக்கமான சேமிப்புகளுக்கு 5.5% ஈவுத்தொகையையும் ஷரியா சேமிப்புகளுக்கு 5.4% ஈவுத்தொகையையும் அறிவிக்க அனுமதித்தது என்றும் அவர் கூறினார்.
வீ கா சியோங் (BN-Air Hitam) முன்பு “சுவருக்கு மேலே உள்ளவர்கள்”, குறிப்பாக EPFஇன் மூத்த அதிகாரிகள், விற்பனைக்கு முன் வர்த்தகம் மற்றும் தனியார்மயமாக்கல் திட்டங்கள் இரண்டையும் அறிந்திருந்தார்களா என்று கேட்டிருந்தார். கசானா நேஷனல் பெர்ஹாட் (MAHB இல்) அதன் பங்குகளை விற்கவில்லை. இறுதியில் அது தனியார்மயமாக்கல் ஒப்பந்தத்தின் கீழ் அதிக சலுகை விலையிலிருந்து பயனடைந்தது. எனவே EPF ஏன் வேறுபட்ட அணுகுமுறையை எடுத்தது? என்றும் அவர் கேட்டார்.








