அவசரமாக தரையிறங்கிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்

ஜகார்த்தாவிலிருந்து கோலாலம்பூருக்கு  மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று மாலை கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) அவசரமாக தரையிறக்கப்பட்டது. போயிங் 737-800 விமானத்தின் அவசர அழைப்பு மாலை 6.02 மணிக்கு வந்ததை அடுத்து, MH720 விமானம் KLIAவின் ஓடுபாதை 32R இல் மாலை 6.17 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியதாக மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நோரஸ்மான் மஹ்மூத் தெரிவித்தார்.

விமானத்தை விரைவில் தரையிறக்க அனுமதிப்பதன் மூலம் நாங்கள் அதைச் சரிசெய்தோம் என்று அவர்  கூறினார். மலேசியன் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் விமான நிறுவனம் விரைவில் இது குறித்த ஓர் அறிக்கையை வெளியிடும் என்று கூறினார். மார்ச் 14 அன்று, மணிலாவிலிருந்து கோலாலம்பூருக்குச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதன் இயந்திரங்களில் ஒன்று தீப்பிடித்ததாகக் கூறப்பட்டதால், அதைத் திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. MH705 விமானம் மணிலாவில் உள்ள நினாய் அக்வினோ அனைத்துலக விமான நிலையத்திற்கு பாதுகாப்பாகத் திரும்பியதால், இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here