சுக்மா தடகள வீரரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ததை எதிர்த்து கோல தெரெங்கானு உயர் நீதிமன்றம் முன்னாள் உதவி பந்துவீச்சு பயிற்சியாளருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மே 16ஆம் தேதி அன்று குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 62 வயதான மாட் சாலே ஜலானி மீதான அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதி ஹசன் அப்துல் கானி உறுதி செய்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, அமர்வு நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்கிறது என்று ஹசான் கூறினார்.இன்று முதல் மாட் சாலே தனது சிறைத்தண்டனையைத் தொடங்க உத்தரவிட்டார். கடந்த ஆண்டு மே 16 அன்று, மார்ச் 2018 இல் மாராங்கில் உள்ள ஒரு வீட்டுத் தோட்டத்தில் 14 வயது சிறுவனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக மாட் சாலே குற்றவாளி என்று அமர்வு நீதிமன்றம் கண்டறிந்தது.
அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. வழக்குத் தொடுப்பவர் சார்பாக துணை அரசு வழக்கறிஞர் நூர் நபிஹா ஹனின் அயிம் ஆஜரானார். அதே நேரத்தில் மாட் சாலேவை பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் வான் சுஹைலி வான் இஸ்மாயில், தனது கட்சிக்காரர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்று கூறினார்.








