மியான்மாரில் மீட்கப்பட்ட இரண்டு உடல்களின் அஸ்தியுடன் 16 பேர் நாடு திரும்புகிறார்கள்-வெளியுறவு அமைச்சு

மியான்மாரில் மீட்கப்பட்ட இரண்டு உடல்களின் அஸ்தியுடன் 16 பேர் நாளை நாடு திரும்புவார்கள் என வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் கூறினார்.

16 மலேசியர்கள் கொண்ட குழு இன்று மியான்மார் – தாய்லாந்து எல்லையைக் கடந்து விட்டனர். மியான்மாரின் மியாவாடியில் (Myawaddy) வேலை வாய்ப்பு மோசடி கும்பலுக்கு பலியான இரண்டு மலேசியர்களின் அஸ்தி நாளை மலேசியாவுக்கு கொண்டு வரப்படவுள்ளது. அதே வேளையில் பாதிக்கப்பட்ட மற்றும் 16 பேரும் நாடு திரும்பவுள்ளனர்.

இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட நான்காவது குழுவான மலேசியர்களை திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேங்காக்கில் உள்ள மலேசியத் தூதரக அதிகாரிகள் தாய்லாந்தின் தூதரகத்திற்கு பயணம் மேற்கொண்டு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சிறப்பு பேருந்தைப் பயன்படுத்தி சாலை வழியாக அவர்கள் அழைத்து வரப்படுவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here