இந்நிலையில், காசாவைச் சேர்ந்த முகமது ஜாவத் தன் குழந்தைக்கு பிடித்தமான பார்லே – ஜி பிஸ்கட்டை வாங்கி தந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதன் விலை தற்போது 2,300 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், இருப்பினும் குழந்தையின் ஆசைக்காக வாங்கி தந்தாக அதில் கூறியுள்ளார்.
இதை பார்த்து பலர் அதிர்ச்சியையும், கவலையையும் வெளிப்படுத்தியுள்ளனர். இதனை கண்ட பயனர்கள் பலரும், பார்லே நிறுவனத்தை டேக் செய்து காசா மக்களுக்கு உதவுமாறு கூறி வருகின்றனர். 1938-இல் தொடங்கப்பட்ட பார்லே-ஜி இந்தியாவில் மலிவு விலையில் பிஸ்கட் பாக்கெட்டுகளை விற்பனை செய்து சந்தையில் பிரபலம் அடைந்தது. 2011-ஆம் ஆண்டில், நீல்சனின் கூற்றுப்படி, பார்லே-ஜி உலகின் அதிக விற்பனையான பிஸ்கட்டாக மாறியது.









