தீ விபத்தில் எரிந்து நாசமான 5 தொழிற்சாலைகள்: சிம்பாங் பூலாயில் சம்பவம்

பேராக் சிம்பாங் பூலாயில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து தொழிற்சாலைகள் எரிந்து நாசமாகின. இருப்பினும் காயமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து அதிகாலை 1.44 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.

தீ விபத்து ஒரு தொழிற்சாலையில் இருந்து தோன்றி பின்னர் அருகிலுள்ள நான்கு இடங்களுக்கும் பரவியதாக நம்பப்படுகிறது. தீ விபத்தில் பிரார்த்தனைப் பொருட்களை உற்பத்தி செய்யும் மூன்று தொழிற்சாலைகள், வண்ணப்பூச்சு தயாரிக்கும் ஒன்று மற்றும் மூலிகை தேநீர் பதப்படுத்தும் மற்றொரு தொழிற்சாலை ஆகியவை அடங்கும் என்று சினார் ஹரியன் தெரிவித்துள்ளது.

தொழிற்சாலைகள் 70% முதல் 80% வரை சேதமடைந்துள்ளன. இழப்புகளின் அளவு இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாக சபரோட்ஸி கூறினார். 38 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 15 தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்ட பின்னர் அதிகாலை 4.10 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here