சுங்கை பூலோ: தங்கள் வளர்ப்பு மகளான 2 வயது குழந்தையை துன்புறுத்தியாகக் கூறப்படும் வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர். சுங்கை பூலோ OCPD கண்காணிப்பாளர் முகமட் ஹபீஸ் முஹமட் நோர், சுங்கை பூலோ மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியால் மரணம் குறித்து போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதாக கூறினார்.
ஜூலை 3 ஆம் தேதி, 2 வயது குழந்தை மயக்க நிலையில் வந்ததாக அவர் தனது அறிக்கையில் கூறினார். பணியில் இருந்த மருத்துவர் சிறுமியை உயிர்ப்பிக்க முயன்றார். ஆனால் அவள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு எந்த பதிலும் இல்லை.
உடலில் நடத்தப்பட்ட பரிசோதனையில் உடல் முழுவதும் காயங்கள், கட்டிகள், வாய், மூக்கில் உலர்ந்த இரத்தம் காணப்பட்டன. பின்னர் புகார்தாரருக்கு சிறுமியை அவரது வளர்ப்பு பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது என்று அவர் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் 27 வயது ஆணும் 28 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டனர். சோதனைகளில் முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை. இரண்டு சந்தேக நபர்களும் சனிக்கிழமை (ஜூலை 5) ஷா ஆலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்று அவர் கூறினார்.









