அமெரிக்காவின் பொற்காலம் மீட்கப்படும் என கூறி அதற்காகவே நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகின்றன என்றார். இதேபோன்று, அரசாங்க செலவினங்களை குறைப்பதற்காக எலான் மஸ்க் தலைமையில் புதிய துறையை உருவாக்கினார்.
இதன்படி, டிரம்ப் தலைமையிலான அரசில் அரசாங்க திறனுக்கான துறை (டி.ஓ.ஜி.இ.) ஒன்று உருவாக்கப்பட்டது. வரி செலுத்தும் மக்களின் பணம் பாதுகாக்கப்படவும், அமெரிக்காவின் கடனை குறைக்கவும், அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோக தடுப்புக்காகவும், அரசில் வீணடிப்பு மற்றும் மோசடி ஆகியவற்றை தடுக்கும் நோக்கத்திலும் இந்த துறை உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் தலைவராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். எனினும், அந்த பதவியில் இருந்து மஸ்க் விலகினார்.
இதனையடுத்து, சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக நெட்வொர்க் தொடர்புடைய சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருந்ததாகவும், அதனால்தான் விசாரணையின் விவரங்களும் கண்டுபிடிப்புகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் எலான் மஸ்க் குற்றம் சாட்டினார். எனினும், டிரம்ப் குறித்துதான் தெரிவித்த கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று மஸ்க் கூறினார்.
இவருடைய ஆலோசனையின் பேரில், அமெரிக்க அரசு பணிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. மேலும் சர்வதே அளவில் அமெரிக்க அரசு சார்பில் பல்வேறு திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வந்த நிதி உதவிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையிலேயே மஸ்க், டிரம்ப் இடையேயான விரிசல் அதிகரித்தது.
டிரம்பின், ஜனாதிபதிக்கான பெரிய அளவிலான வரி மற்றும் செலவு மசோதாவுக்கு மஸ்க் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அது அமெரிக்காவின் கடனை அதிகரிக்க செய்யும் என்றும் கூறினார். அதற்கு ஆதரவாக வாக்களித்தவர்களை தன்னுடைய அதிகாரங்களை பயன்படுத்தி நீக்குவேன் என உறுதியாக கூறினார்.
இந்நிலையில், அமெரிக்காவின் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது மஸ்க், புதிய கட்சி பற்றி பேசினார். அதற்கான வாக்கெடுப்பையும் நடத்தினார். மக்களிடம் அதற்கான ஆதரவையும் கோரினார். ஒரு கட்சி ஆட்சியின் அவசியம் பற்றி அவர் வலியுறுத்தினார். இந்நிலையில், அமெரிக்கா கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை மஸ்க் உருவாக்கி உள்ளார். இதன் வழியே அவர் தன்னுடைய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளார்.
நம்முடைய நாடு வீணாகி கொண்டிருக்கிறது என்றும் கொள்ளையடிக்கப்படும் சூழல் காணப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, உங்களுடைய சுதந்திரம் உங்களுக்கே திருப்பி கொடுக்கப்படுவதற்காக அமெரிக்கா கட்சி இன்று தொடங்கப்படுகிறது என அவர் பதிவிட்டு உள்ளார். இதனால், டிரம்புக்கு போட்டியாக எலான் மஸ்க் தன்னுடைய புதிய கட்சியை எந்த அளவுக்கு பயன்படுத்துவார் என பார்ப்பதற்காக அந்நாட்டு மக்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.









