தைவான் பெண்ணை மிரட்டி பணம் பறித்ததன் தொடர்பில் 5 போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம்

பெட்டாலிங் ஜெயா,  SS2 இல் உள்ள ஒரு சாலைத் தடுப்பில் தைவான் பிரஜையான பெண்ணை மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஐந்து காவல்துறை அதிகாரிகள், விசாரணை முடியும் வரை வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பெட்டாலிங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஷாருல்நிசாம் ஜாபர், ஐந்து அதிகாரிகளும் கைது செய்யப்பட்டதாகக் கூறினார். ஆனால் அவர்களுக்கு எதிரான ரிமாண்ட் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்ததாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

பணம் பறித்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 384 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.அதே நேரத்தில் ஒழுங்கு விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். தற்போது, விசாரணையின் முடிவு வரும் வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெவ்வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார். வியாழக்கிழமை, அந்தப் பெண் தனது துன்பத்தை ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்த பிறகு, அவரது கூற்று குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here