போர்ட் கிள்ளானில் 8ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த 4 வயது சிறுவன்

போர்ட் கிள்ளானில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து இன்று காலை நான்கு வயது சிறுவன் விழுந்து உயிரிழந்தான். சிறுவனின் தந்தை வேலைக்குச் சென்றிருந்தபோது, அவனது தாய் மற்றொரு குழந்தையை குழந்தை பராமரிப்பாளரின் வீட்டிற்கு அனுப்ப வெளியே சென்றிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சிறுவன் எட்டாவது மாடியில் உள்ள  அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னலிலிருந்து விழுந்ததாக நம்பப்படுகிறது என்று கிள்ளான் செலாத்தான் துணை காவல்துறைத் தலைவர் கமல் அரிஃபின் அமன் ஷா ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கிள்ளானில் உள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் தலையில் ஏற்பட்ட காயங்களால் இறந்தான். தகவல் தெரிந்த எவரும் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கலாம் அல்லது கிளாங் சிலாத்தான் போலீஸை 03-3376 2222 என்ற எண்ணில் அழைக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here