கனமழையால் இடிந்து விழுந்த வரலாற்று சிறப்புமிக்க அமீர் கோட்டையின் 200 அடி நீள சுவர்

ராஜஸ்தானின் பல பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து வருகிறது.இந்த சூழலில் சூழலில் ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அமீர் கோட்டையின் 200 அடி நீள சுவர் இன்று இடிந்து விழுந்தது.இதன் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் ஏற்படவில்லை.

ஜெய்ப்பூர், பூண்டி, கோட்டா, சவாய் மாதோபூர், கரௌலி ஆகிய இடங்களில் இன்று காலை வரை 10 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகி உள்ளது. இதனால் சாலைகள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ளம் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அமீர் கோட்டை, 16 ஆம் நூற்றாண்டில் முதலாம் மான்சிங் என்ற அரசரால் கட்டப்பட்டது. 2013 ஆம் ஆண்டில் இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. இது ராஜபுத்திர கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here