12 வயது மாணவனை பிரம்பால் அடித்த சமயப்பள்ளி ஆசிரியருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

12 வயது மாணவரை பிரம்பால் அடித்து காயப்படுத்தியன் தொடர்பில் சமயப் பள்ளி ஆசிரியரை மலாக்காவில் உள்ள ஒரு அமர்வு நீதிமன்றம் ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைத்துள்ளது. சிறுவனின் தாய் போலீசில் புகார் அளித்ததை அடுத்து 22 வயது இளைஞன் நேற்று கைது செய்யப்பட்டதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டிருந்தது.

பாதிக்கப்பட்டவரின் உடலின் பல பகுதிகளில் காயங்களைக் கண்ட பின்னர் மஸ்ஜித் தானா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், தனது மகனை பிரம்பால் அடித்ததாக ஒப்புக்கொண்ட சந்தேக நபரை அழைத்து, அவர் கட்டுப்படுத்த முடியாதவர் என்றும், அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டார் என்றும் கூறினார். போலீசார் பின்னர் சந்தேக நபரைக் கைது செய்து, 2001 ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் கீழ் துஷ்பிரயோகம் செய்ததற்காக அவரை விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here