ஜோகூர் பெர்ஜெயா நீர்முனை அருகே கடலில் குதித்த 73 வயதான பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

ஜோகூர் பாருவில் நேற்று இரவு ஸ்டுலாங் லாட், பெர்ஜெயா நீர்முனை அருகே 73 வயது பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தென் ஜோகூர் பாரு காவல்துறைத் தலைவர் ஏசிபி ரவூப் செலாமட் கூறுகையில், பாதிக்கப்பட்டவர் திடீரென கடலில் குதித்ததை நேரில் பார்த்த ஒரு சாட்சி இரவு 9.10 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார்.

தகவல் கிடைக்க பெற்றவுடன், தாமான் பெலாங்கி நிலையத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழுவும், லார்கின் நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். பாதிக்கப்பட்டவரின் உடல் இரவு 9.30 மணிக்கு மீட்கப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக சுல்தானா அமீனா மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். எக்ஸ்ரே மற்றும் சுகாதார பரிசோதனைக்குப் பிறகு உடல் தடயவியல் பிரிவுக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அடையாளம் காண உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த வழக்கு திடீர் மரண அறிக்கை (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here