மாமா கத்தியால் குத்தியதில் 7 வயது சிறுவன் கவலைக்கிடம்

பச்சோக்: வியாழக்கிழமை (செப்டம்பர் 25)  ஜாலான் கெடை ஜெலாவத்தில் உள்ள ஒரு கடை வீட்டில், ஏழு வயது சிறுவன் ஒருவன் தனது மாமாவால் சுத்தியலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆபத்தான நிலையில் உள்ளதாக சினார் ஹரியான் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, தற்போது குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மலாய் மொழி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பச்சோக் துணை OCPD துணை கண்காணிப்பாளர் முகமட் அஸ்ரி சுலைமான், சம்பவம் குறித்து புகார் அளித்த ஒருவரிடமிருந்து அவசர அழைப்பு வந்ததாக சினார் ஹரியானிடம் தெரிவித்தார்.

முதல்கட்ட விசாரணையில் சந்தேக நபர் தனது சொந்த வீட்டில் சுத்தியலால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் சந்தேக நபரின் மருமகன் என்று நம்பப்படுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். மேலும் சிகிச்சைக்காக குழந்தை பச்சோக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்டவரின் நிலை மிகவும் மோசமாக உள்ளது, என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here