தலைகீழாக வைக்கப்பட்ட தேசியக் கொடி: தவறை உணர்ந்து உடனடியாக சரி செய்த கார் உரிமையாளர்

ஜோகூரில் உள்ள ஒரு கார் உரிமையாளர் வாகனத்தில்  தலைகீழாக இருந்த தேசியக் கொடியை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுத்தார். பெக்கான் நானாஸின் ஜாலுர் பெசாரில் உள்ள ஒரு தளபாடக் கடையின் முன் தலைகீழாக தேசியக் கொடியுடன் கூடிய கார் நிறுத்தப்பட்டிருப்பதை ஒரு பேஸ்புக் பதிவு காட்டியதைத் தொடர்ந்து பொதுமக்களிடையே எதிர்ப்பு எழுந்ததாக பொந்திய காவல்துறைத் தலைவர் ஷோஃபி தாயிப் கூறினார்.

இந்தச் செயல் சமூகத்தினரிடையே பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியது. இருப்பினும், ஆரம்ப விசாரணை முழுவதும் வாகன உரிமையாளர் முழுமையாக ஒத்துழைத்துள்ளார். மேலும் கொடியின் நிலையை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது  என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார் என்று பெர்னாமா தெரிவித்துள்ளது.

நாட்டின் இறையாண்மைக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக அமைக்கப்பட்ட நடைமுறைகள், நெறிமுறைகளின்படி தேசியக் கொடி காட்சிப்படுத்தல் செய்யப்படுவதை உறுதி செய்ய அனைத்து நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் தனிநபர்களுக்கும் காவல்துறை நினைவூட்ட விரும்புகிறது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here