சிபு:
பான் போர்னியோ நெடுஞ்சாலையின் ஸ்பிரிங், செலாங்கௌ அருகே நேற்று இரவு ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரு தம்பதியினர் உயிரிழந்தனர்.
இந்நிகழ்வு பிந்துலூவில் இருந்து செலாங்கௌ நோக்கி பயணித்த 28 வயதான கெல்லி பாலிங் மற்றும் அவரது மனைவி பெலுலா அமின் பயணித்த மோட்டார் சைக்கிள், சாலையோரத்தில் பழுதாகி நிறுத்தப்பட்டிருந்த ஒரு லோரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
இரவு 7.45 மணியளவில் நடந்த விபத்தில் இருவரும் தலையில் கடுமையான காயம் அடைந்தனர். செலாங்கௌ சுகாதார நிலைய மருத்துவ பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தினர்,” என்று, மூக்கா மாவட்ட போலீஸ் தலைமைத் துா்டர் முகமது ரிஸால் அலியாஸ் தெரிவித்தார்.
உயிரிழந்த இருவரின் உடல்கள் பிந்தைய பரிசோதனைக்காக மூக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41(1) கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.












