நாய் துரத்தியதில் மோட்டார் சைக்கிளோட்டி மரணம்: மனைவி – குழந்தை படுகாயம்

குளுவாங் அருகே நேற்று இரவு ஜாலான் எம்பாங்கன், தாமான் முர்னி ஜெயா மாச்சாப்பில் நடந்த விபத்தில் நாயால் துரத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கொல்லப்பட்டார். அவரது மனைவி மற்றும் ஒரு வயது குழந்தை பலத்த காயமடைந்தனர். பெனெல்லி TNT300 என்ற  மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலது தோளில் நிறுத்தப்பட்டிருந்த லோரியின் பின்புறத்தில் மோதியதாக குளுவாங் காவல்துறைத் தலைவர் பஹ்ரின் நோ தெரிவித்தார்.

இரவு 7.30 மணியளவில், தாசேக் மாச்சாப்பில் இருந்து தாமான் முர்னி குடியிருப்புப் பகுதியை நோக்கி தனது மனைவி அவர்களது மகனுடன் மோட்டார் சைக்கிளில் அந்த நபர் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. 28 வயதான அமிருல் அஸிம் ஹம்தான் என அடையாளம் கண்டதாகவும் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 28 வயதுடைய அவரது மனைவி மற்றும் குழந்தை தலையில் பலத்த காயம் அடைந்து குளுவாங்கில் உள்ள என்சே பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here