அஜித் பவார் சென்ற விமானம் வெடித்துச் சிதறிய அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இன்று காலை புதன்கிழமை காலை 8.45 மணியளவில் பாராமதி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது, அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அஜித் பவாருடன் சேர்த்து, அவரது பாதுகாவலர் விதீப் யாதவ், விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, விமானிகள் சுமித் கபூர் மற்றும் ஷாம்பவி பதக் ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்காக பாராமதி சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் விமானம் கீழே விழுந்துவெடித்துச் சிதறிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான அந்த காட்சியில், விமானம் தரையில் மோதிய அடுத்த நொடியே மிகப்பெரிய அளவில் தீப்பிழம்பு எழுவதும், அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்வதும் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here