சில்சார்,மேகாலயா மாநிலம் கிழக்கு ஜெயந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் நிகழ்ந்த நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30-க உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்து அசாம் மாநிலம் சில்சாரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த இருவரும் அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தின் கட்டிகோரா பகுதியைச் சேர்ந்த ராம்சந்திர பைஷ்ணப் மற்றும் நிமருத்தீன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேகாலயாவின் மைன்ஸ்ங்கட் கிராமத்தை ஒட்டிய தாங்க்ஸ்கு என்ற பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த நிலக்கரி சுரங்கத்தில் இந்த வெடிப்பு ஏற்பட்டது. சம்பவம் நடந்த நேரத்தில் சுரங்கத்தில் பல தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது










