கூலாய்: கெம்பாஸ் பாரு–கூலாய் பாதையில் ரயில் கேபிள்களைத் திருட முயன்றபோது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேடிஎம்பி கூற்றின் படி, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) இரவு 8.50 மணியளவில் ரயில் பாதையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதன் விளைவாக KTMB துணைப் போலீசார் ரயில் பாதையில் KM 728.00 மற்றும் KM 728.25 க்கு இடையில் ரோந்து சென்று சோதனைகளை நடத்தினர்.
பின்னர் அவர்கள் ரயில் பாதைப் பகுதியில் உள்ள வேலிக்கு அருகில் கேபிள்களை வெட்டிக் கொண்டிருந்ததாக நம்பப்படும் சந்தேக நபரைக் கண்டனர் என்று சனிக்கிழமை (பிப்ரவரி 21) பேஸ்புக்கில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. அவர் அருகிலுள்ள பெட்ரோல் நிலையத்திற்குத் தப்பிச் செல்ல முயன்ற போது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சம்பவ இடத்தில் மேலும் சோதனைகள் நடத்தப்பட்டதில் அருகிலுள்ள வடிகாலில் வீசப்பட்ட கேபிள் வெட்டும் கருவிகள் கொண்ட பல பைகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அது மேலும் கூறியது. ஆரம்பகட்ட விசாரணைகளில் அந்த நபர் மீது 28 முந்தைய குற்றச் செயல்கள் இருப்பது தெரியவந்துள்ளதாக KTMB தெரிவித்துள்ளது.








