வெள்ளிக்கிழமையன்று சாலை விபத்துகளில் 26 பேர் உயிரிழந்ததாகத் தகவல்

ஈதுல் ஃபித்ரி பண்டிகையைக் கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய நிலையில், 20ஆம் தேதி மொத்தம் 1,515 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன; இதில் 26 பேர் உயிரிழந்தனர். வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இது 772 விபத்துகள் குறைவு என்றாலும், ஒன்பது உயிரிழப்புகள் அதிகம் என புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை, 2,287 விபத்துகள் பதிவாகின, இதில் 17 பேர் உயிரிழந்தனர். பண்டிகை காலத்தில் நெடுஞ்சாலைகளில் 23 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்துகள், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் புக்கிட் அமான் நாடு முழுவதும் 5,544 போக்குவரத்து காவலர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here