இந்த வாரத் தொடக்கத்தில் காஜாங் எம்.ஆர்.டி நிலையத்தில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் 24 வயது இளைஞர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. காஜாங் காவல் நிலையத் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோஃப், சந்தேக நபர் நேற்று பண்டார் பாரு பாங்கி, தாமான் வெஸ்ட் கண்ட்ரியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாகக் கூறினார். மேலதிக விசாரணைக்காக அவரை நீதிமன்றக் காவலில் வைக்க காவல்துறை முயலும்.
ஒருவரின் மானபங்கத்திற்கு எதிரான குற்றச் சட்டத்தின் 509ஆவது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக நஸ்ரோன் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது. வியாழக்கிழமை காலை 9 மணிக்கு எம்.ஆர்.டி நிலையத்தின் ‘கேட் ஏ’ பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தை 23 வினாடிகள் கொண்ட காணொளி ஒன்று வைரலாகப் பரவியது. இதைத் தொடர்ந்து, சந்தேக நபரைத் தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டு அவரை கைது செய்துள்ளது.








