குளுவாங்கில் புலியின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

 ஜோகூர் குளுவாங் பகுதியில் உள்ள ஒரு நவீன விவசாயத் திட்டத்திற்கு அருகே புலியின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, வனவிலங்கு அதிகாரிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அங்கு கண்காணிப்பை மேற்கொள்ள உள்ளனர். சிம்பாங் ரெங்காம் வனக் காப்பகத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில், ஏப்ரல் 3 அன்று உள்ளூர் மக்களால் இந்தத் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (பெர்ஹிலிட்டன்) தெரிவித்துள்ளது.

சுமார் 12 செ.மீ அகலமும் 11 செ.மீ நீளமும் கொண்ட அந்தத் தடங்கள் புலியினுடையவை என்பதை அதிகாரிகள் பின்னர் உறுதி செய்ததாக பெர்ஹிலிட்டன் தலைமை இயக்குநர் அப்துல் காதிர் அபு ஹாஷிம் கூறினார். பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பெர்ஹிலிட்டன் 14 நாட்களுக்கு ரோந்து மற்றும் கண்காணிப்பை மேற்கொள்ளும். இதற்கிடையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பரிசீலிப்பதற்கு முன்பு, புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க புலி பாதுகாப்புப் பிரிவு கேமராக்களைப் பொருத்தும். குடியிருப்பாளர்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறும், குறிப்பாக அதிகாலை அல்லது இரவு நேரங்களில் பண்ணைகள் அல்லது வனப் பகுதிகளுக்குத் தனியாகச் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here