பீஜிங், உலகம் முழுவதும் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் கணிணி உள்ளிட்ட இயந்திரங்களுக்கு மனிதர்களைப் போன்ற சிந்தனையையும், பகுத்தறிவையும் கொடுக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஏ.ஐ. துறையில் கால்பதித்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவை சேர்ந்த மைக்ரோசாப்ட், கூகுள், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய ஏ.ஐ. மாடல்களை அறிமுகம் செய்து சந்தைக்கு கொண்டு வந்துள்ளன.








