அறிமுகமானவரால் கத்தி குத்துக்கு ஆளான அரசாங்க ஊழியரான பெண்

அலோர் ஸ்டார், கப்பாளா பத்தாஸ் ஜாலான் திதி கஜா பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே, தனக்குத் தெரிந்த நபர் ஒருவரால் 35 வயதான அரசு ஊழியர் ஒருவரின் கழுத்தின் வலது பக்கத்தில் கத்தியால் குத்தப்பட்டதில் அவர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 9.15 மணிக்கு நடந்ததாக நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் தனது காருக்குள் கத்தியால் குத்தப்பட்டார், பின்னர் சிகிச்சைக்காக சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு (HSB) கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெடா காவல்துறை தலைமையகத்தைச் சேர்ந்த தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் சையத் பஸ்ரி சையத் அலி, சம்பவ இடத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here