ஷா ஆலம் பகுதியில் நள்ளிரவுக்குப் பிறகு நடந்த ஒரு சம்பவத்தில், 20 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் அகழ்வு இயந்திரத்துடன் மோதி, அந்த கனரக இயந்திரத்தின் அடியில் சிக்கி உயிரிழந்தார். மேலாண்மை, அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள ஒரு சர்க்கரை சுத்திகரிப்பு ஆலையை நோக்கி ஷா ஆலம் செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்தது.
நள்ளிரவு 12.06 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், ஷா ஆலம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஐந்து தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டதாகவும் சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறை செயல்பாடுகளின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார். சம்பவ இடத்திலேயே சுகாதார அமைச்சகப் பணியாளர்களால் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டு, மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.






