வைரலான காணொளி ஒன்றில் மைக்காட் வைத்திருப்பதாகக் கூறிவரும் வெளிநாட்டவரை அடையாளம் காண, தேசியப் பதிவுத் துறை (ஜேபிஎன்) காவல்துறையின் உதவியை நாடியுள்ளது. மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மைகார்டு வைத்திருப்பதாகக் கூறப்படும், வைரலான காணொளியைத் தொடர்ந்து ஜேபிஎன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
அந்தக் காணொளியின் உள்ளடக்கம் குழப்பத்தையும் பொதுமக்களிடையே பீதியையும் ஏற்படுத்தக்கூடும் என்று அது கூறியது. ஒரு வைரல் காணொளியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட நபரின் குடியுரிமையை ஜேபிஎன் உறுதிப்படுத்தவோ அல்லது மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவோ முடியாது. எனவே, சம்பந்தப்பட்ட நபரைக் கண்டறிந்து, அவரை அடையாளம் கண்டு, மேலதிக விசாரணைகளை நடத்த உதவுமாறு காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட முகமைகளை ஜேபிஎன் கேட்டுக்கொண்டுள்ளது,” என்று அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.









