திருச்சி-சார்ஜா இடையே மீண்டும் விமான சேவை

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கான விமான சேவைகள். அங்கு நிலவிய போர் காரணமாகக் கடந்த பிப்ரவரி 28-ந் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது சூழ்நிலை சீராகியுள்ளதால், திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது விமான சேவையை மீண்டும் அதிகாரப்பூர்வ மாகத் தொடங்கியுள்ளது.

திருச்சியில் இருந்து நேற்று முன்தினம் முதற்கட்டமாக இயக்கப்பட்ட இந்த விமானத்தில் 158 பயணிகள் பயணித்தனர். இந்த மறுதொடக்க அறிவிப்பு வளைகுடா நாட்டுப் பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here