கொடுமைப்படுத்துதல் புகார் குறித்து விசாரிக்க மாரா கல்லூரிக்கு 24 மணி நேரம் அவகாசம்

ஜோகூரில் உள்ள மாரா இளநிலை அறிவியல் கல்லூரியின் ஆறு மாணவர்கள், சக மாணவரை கொடுமைப்படுத்திய குற்றத்திற்காகக் கண்டறியப்பட்டால், கல்லூரியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று மாரா தலைவர் அஷ்ரஃப் வஜ்தி துசுகி தெரிவித்தார்.

விசாரணை நடத்துவதற்கும், இதில் சம்பந்தப்பட்டதாகக் கண்டறியப்படும் எந்தவொரு மாணவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒரு ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு மாரா மற்றும் கல்லூரி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

6 மாணவர்களின் கொடுமைப்படுத்தலால் ஏற்படும் துன்பத்தை இனியும் தாங்கிக்கொள்ள முடியாததால், தங்களது மகன் உறைவிடக் கல்லூரியை விட்டு வெளியேறக் கோரியதாக 14 வயது சிறுவனின் பெற்றோர் தெரிவித்த பின்னரே இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்ததாக அஷ்ரஃப் கூறினார்.

காவல்துறை விசாரணைக்கு உதவுவதற்காக அந்த 6  பேரும் இரண்டு நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். எந்தக் காரணம் கூறப்பட்டாலும், இளநிலை மாணவர்களை ‘ஒழுங்குபடுத்துதல்’ என்ற போர்வையில் கொடுமைப்படுத்துவதோ அல்லது விஷயங்களைத் தன் கையில் எடுத்துக்கொள்வதோ முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, அது பொறுத்துக்கொள்ளப்படாது என்று அஷ்ரஃப் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here