இரண்டாம் படிவம் பயிலும் ஆண் மாணவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில், 43 வயதான உறைவிடப் பள்ளி ஆசிரியரும் விடுதிக் காப்பாளருமான ஒருவருக்கு, கூச்சிங் அமர்வு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதித்துத் தீர்ப்பளித்தது.குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14(a)-ன் கீழ் குற்றவாளி எனக் கண்டறிந்த நீதிபதி நூர்ஹிஷாம் ஜாஃபர், குற்றவாளிக்குத் தண்டனை விதித்ததாக டயாக் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் குற்றம், 2022ஆம் ஆண்டின் மத்தியில், மாணவர் விடுதியின் இரண்டாம் மாடியில் உள்ள காப்பாளரின் குடியிருப்பில் நிகழ்ந்தது.சிறார்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளிக்கு இது மூன்றாவது தண்டனையாகும். ஜூன் 2022இல் மற்றொரு 14 வயது சிறுவனைப் பாலியல் ரீதியாகத் தாக்கிய குற்றத்திற்காக, மே 8 அன்று அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 13 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. அதற்கு முன்பு, கடந்த ஆண்டு அக்டோபர் 3 அன்று, அக்டோபர் 2022இல் 16 வயது சிறுவனைப் பாலியல் ரீதியாகத் தாக்கிய குற்றத்திற்காக அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.








