குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க செயல்திட்டங்களை வகுக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

சென்னை, கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”கோவை – தொண்டாமுத்தூர் அருகே அரசு பேருந்து ஓட்டுநரால் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு, இந்த தவெக அரசு போதிய செயல்திட்டங்களை வகுக்க வேண்டும். ஒருபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் தொடர்கதையாக உள்ள சூழலில், குழந்தைகள் பாதுகாப்பும் கேள்விக்குறியாகவுள்ளது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here