கோலாலம்பூரில் உள்ள ‘இந்தியா ஹவுஸ்’ வளாகத்தில் இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா, ‘வந்தே மாதரம்’ இயக்கத்தின் 150-வது ஆண்டு விழா ஆகியவை விமரிசையாகக் கொண்டாடப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய மலேசியாவுக்கான இந்தியத் துணைத் தூதர் ஹிதேஷ் ராஜ்பால், இந்தியக் குடிமக்களும் இந்தியாவின் நண்பர்களும் பெருந்திரளாக விழாவில் கலந்துகொண்டது ஒரு புதிய சாதனையாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் 2024 இந்தியப் பயணமும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிப்ரவரி 2026 மலேசிய வருகையும் இரு நாடுகளின் உறவை விரிவான உத்தேசக் கூட்டுறவாக வலுப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். தற்காப்பு, பயங்கரவாத ஒழிப்பு, அதிநவீன தொழில்நுட்பங்கள், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு புதிய துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு வியக்கத்தக்க வகையில் வளர்ந்து வருகிறது என்று ஹிதேஷ் குறிப்பிட்டுக் கூறினார்.

மலேசியாவில் வசிக்கும் சுமார் 2.75 மில்லியன் இந்திய வம்சாவளி மக்களும், 1,75,000 இந்தியக் குடிமக்களும் இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான வாழ்ந்து கொண்டிருக்கும் பாலமாகத் திகழ்கின்றனர். அவர்கள் இரு நாட்டு நட்புறவைச் செழுமைப்படுத்துகின்றனர் எனப் புகழாரம் சூட்டிய அவர், அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் தனது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
ராமேஸ்வரி ராஜா
டிவாஷினி நடேசன்









