காணாமல் போன மீனவரின் உடல் பூலாவ் ஜெரேஜாக்கில் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுப்பு

ஜார்ஜ் டவுன், அக்டோபர் 3 :

ஜெலுடாங் கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையின்போது படகில் இருந்து தவறி விழுந்து, நீரில் மூழ்கி இறந்ததாக நம்பப்படும் மீனவர் ஒருவர், நேற்று இங்குள்ள பூலாவ் ஜெரேஜாக் கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

பினாங்கு மலேசிய கடல்சார் அமலாக்க முகமையின் இயக்குநர் கடல்சார் கேப்டன் அப்துல் ரசாக் முகமட் கூறுகையில், கடந்த சனிக்கிழமை காணாமல் போனதாகக் கூறப்படும் முகமட் ஷாருல் மன்சோர் (37) என்பவரின் உடல், நேற்று நண்பகல் 12.45 மணியளவில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டு MERS 999 மூலம் அறிவிக்கப்பட்டது.

“இங்கு அருகிலுள்ள சிம்பாங் அம்பாட், செபராங் பிறை செலாத்தான் என்ற முகவரியில் உள்ள பாதிக்கப்பட்டவர், மீன்பிடிக்கச் சென்றபோது ஜெலுடாங் கடலில் படகில் இருந்து விழுந்ததாக நம்பப்படுகிறது.

ஜெலுடாங் காவல் நிலையத்திற்கு கிடைத்த போலீஸ் புகாரின் அடிப்படையில், “சம்பவத்தின் போது வானிலை மோசமாக இருந்ததாகவும், பலியான ஆணின் உடல் முழு உடையில் காணப்பட்டுள்ளதாகவும் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது,” என்றும் அவர் இன்று கூறினார்.

கடல்சார் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மோசமான வானிலையின்போது கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், தேவைப்பட்டால், அவர்கள் லைஃப் ஜாக்கெட் அணிய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here