புக்கிட் காசிங்கில் உள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஊடகங்கள், போலீஸ் பாதுகாப்புப் படையினர் வந்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர். அன்வார் விரைவில் அரண்மனைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அவர் பதவியேற்க முடியுமா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது.
இதற்கிடையில், புக்கிட் டாமன்சாராவில், டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் வீட்டிற்கு அதிகமான பார்வையாளர்கள் வருகிறார்கள். இருப்பினும் இதுவரை போலீஸ் பாதுகாப்பு இல்லை.









