தீயில் கருகி உயிரிழந்த ஆடவர்: அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த சம்பவம்

டாமன்சாரா டாமாய் லெஸ்தாரி அடுக்குமாடி குடியிருப்பின் பிளாக் C இன் நான்காவது மாடியில் திங்கட்கிழமை (மே 20) இரவு சுமார் 8 மணியளவில் உள்ளூர் நபர் ஒருவர் தீயில் கருகி  உயிரிழந்தார். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் கூறுகையில், இரவு 8.58 மணியளவில் தீ விபத்து குறித்து தனது குழுவினருக்கு ஒரு துயர அழைப்பு வந்தது என்றார்.

சுங்கை பூலோ மற்றும் டாமன்சாரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து 18 தீயணைப்பு வீரர்களுடன் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இரவு 9.30 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.  ஒரு நபர், ஒரு அறையில் ஒரு படுக்கையில் எரித்து இறந்து கிடந்தார் என்று அவர் திங்கள்கிழமை இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here