மேம்பாலத்தில் இருந்து விழுந்த கார் – காயங்களுடன் உயிர் தப்பிய ஆடவர்

மலாக்காவில் இன்று அதிகாலை சையது அப்துல் அஜீஸ் மேம்பாலத்தில் இருந்து 30 மீட்டர் கீழே ஓட்டிச் சென்ற கார் சறுக்கி கீழே விழுந்ததில் ஆடவர் ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார். பெரோடுவா மைவியை ஓட்டி வந்த 53 வயது நபர் லிம்பொங்கனுக்குச் சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக மலாக்கா காவல்துறைத் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாடிட் தெரிவித்தார்.

ஆரம்ப விசாரணையில், சம்பவ இடத்திற்கு வந்தவுடன், அந்த நபர் தூங்கிவிட்டார். இதனால் கார் சறுக்கியது. கார் மேம்பாலத்தின் சுவர் மீது  மோதி மேம்பாலத்தில் இருந்து விழுந்தது. பாதிக்கப்பட்டவர் உடல் காயங்களுடன் தப்பினார் மற்றும் சிகிச்சைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று அவர் இங்கு ஒரு அறிக்கையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here