பந்தயத்துக்காக வளர்க்கப்பட்ட 936 சண்டைக்கோழிகள் பறிமுதல் – மூவர் கைது

சபாவில் பிலிப்பைன் இனத்தை சேர்ந்த 936 சண்டைக்கோழிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 2 வெளிநாட்டவர் உள்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் சபாவின் பாபர் பகுதியில் உள்ள கம்பூங் கம்பிசான், ஜாலான் கயாவ் கம்பிசான் பகுதியில் நடந்தது.

“விலங்கியல் சேவைகள் துறையின் கோத்தா கினபாலு கிளை இணைந்து நடத்திய இந்த ரெய்ட்டில், RM4.7 மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 30 இரும்புக் கூண்டுகள், பிலிப்பைன்ஸிலிருந்து வந்த 107 குறிச்சொல் கம்பிகள், பறவைகளுக்கான பலவகை விபரீத மருந்துகள் மற்றும் வைட்டமின்கள் அடங்கும்,” புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறை (JKDNKA) இயக்குநர் டத்தோ ஸ்ரீ அஸ்மி அபு காசிம் தெரிவித்தார்.

கைதான மூவரில் ஒருவர் இந்தோனேசியாவை சேர்ந்தவர், மற்றொருவர் பிலிப்பைன் நாட்டு நபர் எனவும், இவர்களின் வயது 38 முதல் 59 வரை உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இவர்கள் மீது 2015 ஆம் ஆண்டு விலங்குகள் பிரிவு சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சட்டப்பிரிவில் அனுமதியின்றி விலங்குகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இதேவேளை, மாநிலம் முழுவதும் 179 ரெய்டுகள் நடத்தப்பட்டதாகவும், இவை மூலம் மொத்தம் 314 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அஸ்மி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here