பெய்ஜிங்,
சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலும் அதன் புறநகரங்களிலும் பெய்த கனமழையால் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு ஊடகமான சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 28 பேர் மியூன் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இருவர் யான்சிங் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகமானது பெய்த பகுதிகள் மலையால் சூழப்பட்ட உள்ளாட்சிகள் என்பதாலும், இழப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளன.
திங்கட்கிழமை நள்ளிரவு நிலவரப்படி 80,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பெய்ஜிங்கின் வடக்கு மாவட்டங்களில் மட்டும் 543.3 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது – இது கடந்த சில ஆண்டுகளில் பதிவான மிகப்பெரிய அளவான மழையாகும்.
தீவிர மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளும் வகையில், சீன அதிபர் ஸி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். மழையால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகளுக்கு சிகிச்சை அளித்து, மீட்பு நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க அதிகாரிகளுக்கு கட்டளையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கில் தற்போது மழை மற்றும் வெள்ளத்திற்கான அதிகபட்ச விழிப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.









