ஜோகூர் பாரு: நேற்று மாலை, பாசீர் கூடாங் தஞ்சோங் புத்ரி ரிசார்ட்டில் உள்ள ஒரு கொள்கலனில் உள்ள ஏர் கண்டிஷனிங் யூனிட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு ஆண்கள் முகத்திலும் உடலிலும் தீக்காயங்கள் ஏற்பட்டன. ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையம், மாலை 4.51 மணிக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததாகக் கூறியது. பாசீர் கூடாங் தீயணைப்பு மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
அங்கு சென்றடைந்த குழு, கொள்கலனின் ஏர் கண்டிஷனிங் யூனிட்டில் வெடிப்பு ஏற்பட்டதைக் கண்டறிந்தது.மேலும் தீயை உலர் தூள் தீ அணைப்பான் மூலம் அணைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.









