நேருக்கு நேர் மோதி கொண்ட வாகனங்கள்: ஒருவர் பலி – 6 பேர் படுகாயம்

தாப்பா, தாசேக் டெமோ அருகே நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாடுகள் பிரிவின் உதவி இயக்குநர் சபரோட்சி நூர் அஹ்மத், உயிரிழந்தவர் 29 வயது ஆண் என்று கூறினார்.

புதன்கிழமை (மே 27) அதிகாலை சுமார் 2.55 மணியளவில் சுகாதார அமைச்சகப் பணியாளர்களால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். உயிரிழந்தவர், 40 வயதுடைய மற்றொரு ஆணுடன் ஒரு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார் என்று சபரோட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மற்றொரு பல்நோக்கு வாகனத்தில், 19 முதல் 66 வயதுக்குட்பட்ட ஐந்து பெரியவர்கள் காயமடைந்தனர் என்றும் அவர் மேலும் கூறினார். இரு வாகனங்களும் நேருக்கு நேர்  மோதிக்கொண்டதால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here