ராஞ்சியில் போராடும் மாணவர்களுக்கு தொலைதூர நகரங்களில் இருந்து ஆன்லைன் மூலம் உணவு

ராஞ்சி, மாணவர்களுக்கு, வெளிமாநிலங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள நல் உள்ளங்கள் ஸ்விக்கி, மற்றும் சொமேட்டோ செயலிகள் மூலமாக உணவுகளை ஆர்டர் செய்து அனுப்பி வருகின்றனர்.

காலவரையற்ற தர்ணா

ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியிலுள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் ஆயிரக்கணக்கான போட்டித் தேர்வு ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் ஜூலை 25 முதல் தங்களது தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

சி.ஐ.டி-க்கு எதிர்ப்பு

ஜே.பி.எஸ்.சி மற்றும் ஜே.எஸ்.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் குறித்து ஜார்கண்ட் மாநில அரசின் சி.ஐ.டி போலீசார் நடத்தி வரும் தற்போதைய விசாரணையில் தங்களுக்கு சிறிதும் நம்பிக்கையில்லை என போராட்டக்களத்தில் உள்ள மாணவர்கள் கூறியுள்ளனர்

அமலாக்கத்துறை

சுதந்திரமான விசாரணை: இந்த ஊழல் குறித்து மத்திய புலனாய்வுத் துறை அல்லது அமலாக்கத்துறை மூலம் உடனடியாக ஒரு சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மாணவர்கள் வீதிக்கு வந்து போராடி வருகின்றனர்

ஆன்லைன் உணவு

ஜே.பி.எஸ்.சி மற்றும் ஜே.எஸ்.எஸ்.சி தேர்வு முறைகேடுகளை எதிர்த்து ராஞ்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு, வெளிமாநிலங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள நல் உள்ளங்கள் ஸ்விக்கி, மற்றும் சொமேட்டோ செயலிகள் மூலமாக உணவுகளை ஆர்டர் செய்து அனுப்பி வருகின்றனர். தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து ராஞ்சியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு பெருகியுள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தர் பாணி

டெல்லியில் சி.ஜே.பி நடத்திய போராட்டத்தின்போது வெளிப்பட்ட அதே தேசத்து ஒற்றுமையும் மனிதநேயமும் தற்பொழுது ராஞ்சியிலும் எதிரொலிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஞ்சியில் போராட்டம் நடைபெறும் களத்தில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இன்னும் ஒரு பெரிய சவாலாகவே நீடிப்பதாக ஏற்பாட்டாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தீர்வுக்கான போராட்டம்

அரசு தரப்பில் எவ்வித உரிய நடவடிக்கையும் எடுக்கப்படாததால், சிரமத்திற்கிடையில் மாணவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here