அடுத்தாண்டு ஜோகூர் மாநிலத்தில் சீக்மா விளையாட்டுப் போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது. கடந்தாண்டு இப்போட்டியை பேரா ஏற்று நடத்தியது.
ஜோகூர் சீக்மா போட்டியில் 30 வகையான விளையாட்டுகள் இடம் பெறுவது உறுதியாகியுள்ளன. இன்னும் கூடுதல் போட்டிகள் பரீசிலிக்கப்படலாம்.
மக்களின் மனம் கவர்ந்த போட்டிகளாக அவை இருந்தால் சீக்மாவில் ஙே்ர்த்துக் கொள்ளபடலாம் என்று இளைஞர் – விளையாட்டுத்துறை அமைச்ங்ர் ங்டை் ங்ாடிக் தெரிவித்தார்.
இளம் விளையாட்டாளர்களை அடையாளம் காணும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சீக்மா போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் வழி ஏராளமான இளம் விளையாட்டாளர்கள் உருவாகியுள்ளனர்.
அந்த வகையில் அடுத்தாண்டு சீக்மா போட்டியை ஜோகூர் மாநிலம் ஏற்று நடத்துகிறது. இப்போட்டிக்கான ஏற்பாட்டுப் பணிகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜோகூர்பாருவில் ஸ்போர்ட்ஸ் சிட்டி அரங்கை நேற்று பார்வையிட்ட இளைஞர் – விளையாட்டுத்துறை அமைச்ங்ர் ங்டை் ங்ாடிக், ஏற்பாடுகள் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதை பாராட்டினார்.
இதனிடையேள, ஊக்கமருந்து விவகாரம் தொடர்பில் சீக்மா போட்டியில் எடைதூக்குதல் இடம் பெறுமா என்பது இன்னும் முடிவாகவில்லை.
எடைத்தூக்குதல் போட்டியை ஙே்ர்த்துக் கொள்வதா இல்லையா என்பது இன்னும் முடிவாகவில்லை. சீக்மா போட்டி நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என்றார் அவர்.