பக்காத்தானின் ஒவ்வொரு கட்சியும் வலுவானதே மாட் சாபு

பாசிர் சாலாக்

பக்காத்தான் கூட்டணியின் உறுப்புக் கட்சிகள் ஒவ்வொன்றும் பலமான கட்சிதான் என அமானா நெகாராவின் தலைவர் முகமட் சாபு தெரிவித்தார்.

கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்ற கட்சிகளை விட பலமானது என சொல்வதற்கில்லை. ஏனெனில், உறுப்புக் கட்சிகள் தனித்தனியாகப் , பொதுத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் தேசிய முன்னணியிடமிருந்து ஆட்சியைக் கைபற்றி இருக்க முடியாது.

தனித்தனியாகப் போட்டியிட்டிருந்தால், அமானாவுக்கும் பிரிபூமி பெர்சத்துவுக்கும் ஒரு தொகுதி கூட கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ஜசெவுக்கும் பிகேஆருக்கும் கணிசமான தொகுதிகள் கிடைத்திருக்கும்.

எனவே, உறுப்புக் கட்சிகளிடையே மோதலைத் தவிர்த்து, நான் பெரியவன் எனும் மனப்பான்மையைத் தவிர்த்து நல்லிணக்கத்தோடு செயல்பட்டு தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here