சுங்கை பட்டாணி
வீட்டுப் பாடங்களைச் செய்ய வேண்டிய நெருக்குதல், மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட 13 வயது மாணவன் தூக்குப் போட்டு தற்கொலைச் சம்பவம் குறித்து பேசிய கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக், இது மிகவும் வருத்தமளிக்கிறது என்றும், பள்ளிக்கூடம் என்பது கல்வியை ஈட்டும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு இடமாக இருக்க வேண்டும். ஆனால் மன அழுத்தம் ஏற்படும் இடமாக மாறிவிடக்கூடாது.
இச்சம்பவம் குறித்த போலிசாரின் விசாரணை முடிவிற்காக காத்திருப்போம். தேவைப்பட்டால் கல்வி அமைச்சின் கற்றல் கற்பித்தல் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என மஸ்லி கூறியுள்ளார்