கோலாலம்பூர்
சீன பிரஜைகளுக்குப் போலியான மைகார்டுகளை விநியோகித்த அரசு மேல்நிலை அதிகாரிகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த வாரம் சீனப் பிரஜைகளுக்கு மைகார்டுகள் விநியோகிக்கப்பட்ட செய்தி வெளியான பின்னர், போலீசாரின் நடவடிக்கையில் அவர்கள் 2012ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்கள்(சிறப்பு நடவடிக்கை)யின் மூலம் கைது செய்யப்பட்டார்.
முறையான மைகார்டை வைத்து 20 வயதுக்கும் கூடிய சீனப் பெண் ஒருவர் மலேசிய கடப்பிதழுக்கு விண்ணப்பிக்க வந்தபோது, மலாய் மொழியியில் பேச முடியாமல் தடுமாறியதைத் தொடர்ந்து பினாங்கு குடிநுழைவுத் துறையினர் போலிசில் புகார் அளித்தனர்.
அந்தப் பெண் போலியான மைகார்டை வைத்து கடப்பிதழுக்கு விண்ணப்பித்ததில் சந்தேகம் எழுந்தது. மேலும், அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டதிலும் சந்தேகம் எழுந்தது.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதில் சம்பந்தப்பட்டுள்ள பல நபர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தக் கும்பல் 350,000 ரிங்கிட் மதிப்புடைய மைகார்டுகளை விற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கும்பல் இதுவரை 6 போலி மைகார்டுகளை விற்றிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.