கோலாலம்பூர்
14ஆவது பொதுத்தேர்தலில் அடைந்த வெற்றியைப் போல அடுத்த பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் கடினம் என துன் மகாதீர் தெரிவித்தார்.
கடந்த பொதுத்தேர்தலில் நஜிப்பின் ஊழலே முக்கிய கருவாக இருந்தது. அவரைக் கட்டாயம் அகற்ற வேண்டியிருந்தால் பக்காத்தான் மகத்தான வெற்றியை அடைந்தது.
ஆனால், 15ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தானின் அடைவுநிலையை வைத்து பரப்புரை நிகழ்த்த வேண்டும். அதன் அடிப்படையில்தான் வெற்றி தோல்வி கணிக்கப்படும். எனவே பக்காத்தான் சிறப்பான அடைவுநிலையை முன்வைத்து வெற்றி பெற பாடுபட வேண்டுமென துன் மகாதீர் தெரிவித்தார்.
தம்மைப் பற்றிய 90 நிமிட வரலாற்று செய்திச் சுருள் வெளியீட்டில் கலந்து கொள்ள வந்த மகாதீர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது அதனை தெரிவித்தார்.