தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமா?

3 ஸ்லீப்பர் செல்கள் கைது!

பெங்களுரு –

தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட 3 பேரை தமிழக கியூபிரிவு போலீசார் பெங்களூருவில் கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர்.

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட முகமது ஹனிப் கான், இம்ரான்கான், சையது ஆகிய மூவரிடமும் இருந்து மூன்று துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ் கொலையில் தொடர்புடைய காஜா மொய்தீன், சையதுஅலி நவாஸ், அப்துல் ஷமீம் ஆகியோர் வெளிநாடு தப்பிச் செல்ல உதவியதும் தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அண்மைக்காலமாக தென் தமிழகத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த செய்திகள் பெருகி வருகின்றன. குறிப்பாக சென்னை, பெங்களூரு, திருப்பதி ஆகிய முக்கிய இடங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here