பந்திங், மார்ச் 10-
தொழிற்சாலையிலிருந்து வாங்கும்போது எப்படி இருந்ததோ அதனை, அதுபோலவே பயன்படுத்தாமல் உருமாற்றம் செய்த 14 வாகனமோட்டிகளின் மோட்டார் சைக்கிள்களை பந்திங் மாவட்ட போலீசார் பறிமுதல் செய்தனர். பந்தாய் கெளானாங்கில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டனர் என கோலலங்காட் மாவட்ட காவல் துறைத் தலைவர் சூப்பிரிடெண்டண்ட் அசீஸான் துக்கிமான் தெரிவித்தார்.